ETV Bharat / bharat

நான் தூக்கிட்டுக்கொள்கிறேன் - தொடர் சர்ச்சையில் சுகேஷ் சந்திரசேகரின் அடுத்த கடிதம்

சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் ஆளுநருக்கு நேற்று (நவ-7) எழுதிய கடிதத்தில் நான் தூக்கிட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

author img

By

Published : Nov 8, 2022, 7:21 PM IST

Etv Bharatநான் தூக்கிட்டு கொள்கிறேன் - தொடர் சர்ச்சையில் சுகேஷ் சந்திரசேகரின் அடுத்த கடிதம்
Etv Bharatநான் தூக்கிட்டு கொள்கிறேன் - தொடர் சர்ச்சையில் சுகேஷ் சந்திரசேகரின் அடுத்த கடிதம்

டெல்லி: ஊழல் தடுப்புச்சட்டம் மற்றும் பணமோசடிச்சட்டத்தின்கீழ் பல ஊழல் வழக்குகளின்கீழ் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் இன்று (நவ-8) நான்கவதாக எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கும் இவர் மீது உள்ளது. இந்நிலையில் இவர் எழுதிய கடிதத்தில், 'கெஜ்ரிவால், டெல்லி ஆளுநருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து விலகுங்கள். இல்லையென்றால் அந்த தவறுகள் நிரூபிக்கப்படவிட்டால் நான் தூக்கிட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் எழுதிய கடிதத்தில், ‘ஏன் நீங்கள் ஜெயினுடன் ஹயாட்டில் நடந்த எனது இரவு விருந்தில் கலந்துகொண்டீர்கள்? அசோலாவிலுள்ள கெஹ்லோட்டின் பண்ணை வீட்டில் வைத்து நான் தந்த 50 கோடி ரூபாயை ஏன் பெற்றுக்கொண்டீர்கள்?

நான் நாட்டின் பெரும் பயங்கரவாதி என்றால் எதன் அடிப்படையில் நீங்கள் என்னிடம் 50 கோடி ரூபாயை வாங்கி எனக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக சொன்னீர்கள்...?’ என்று சுகேஷ் சந்திரசேகர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று (நவ-7)எழுதியுள்ள மூன்றாவது கடிதத்தில், 'தான் முதலில் எழுதிய கடிதம் வெளியான பிறகு, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சிறைத்துறை டிஜிபி சந்தீப் கோயல் ஆகியோர் தனக்கு சிறையில் நெருக்கடி தருகின்றனர். ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான புகாரை விசாரிக்க, சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்” எனத்தெரிவித்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகரின் நான்காவது கடிதம்
சுகேஷ் சந்திரசேகரின் நான்காவது கடிதம்

இதனை சுகேஷின் வழக்கறிஞர் ஏ.கே.சிங் உறுதி செய்துள்ளார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி குஜராத் தேர்தலுக்காக தயாராகும் நேரத்தில் இது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும்.

இதையும் படிங்க:’என்னிடம் ரூ.50 கோடி கேட்டார் கெஜ்ரிவால்..!’ - மோசடி குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர்

டெல்லி: ஊழல் தடுப்புச்சட்டம் மற்றும் பணமோசடிச்சட்டத்தின்கீழ் பல ஊழல் வழக்குகளின்கீழ் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் இன்று (நவ-8) நான்கவதாக எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கும் இவர் மீது உள்ளது. இந்நிலையில் இவர் எழுதிய கடிதத்தில், 'கெஜ்ரிவால், டெல்லி ஆளுநருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து விலகுங்கள். இல்லையென்றால் அந்த தவறுகள் நிரூபிக்கப்படவிட்டால் நான் தூக்கிட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் எழுதிய கடிதத்தில், ‘ஏன் நீங்கள் ஜெயினுடன் ஹயாட்டில் நடந்த எனது இரவு விருந்தில் கலந்துகொண்டீர்கள்? அசோலாவிலுள்ள கெஹ்லோட்டின் பண்ணை வீட்டில் வைத்து நான் தந்த 50 கோடி ரூபாயை ஏன் பெற்றுக்கொண்டீர்கள்?

நான் நாட்டின் பெரும் பயங்கரவாதி என்றால் எதன் அடிப்படையில் நீங்கள் என்னிடம் 50 கோடி ரூபாயை வாங்கி எனக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக சொன்னீர்கள்...?’ என்று சுகேஷ் சந்திரசேகர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று (நவ-7)எழுதியுள்ள மூன்றாவது கடிதத்தில், 'தான் முதலில் எழுதிய கடிதம் வெளியான பிறகு, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சிறைத்துறை டிஜிபி சந்தீப் கோயல் ஆகியோர் தனக்கு சிறையில் நெருக்கடி தருகின்றனர். ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான புகாரை விசாரிக்க, சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்” எனத்தெரிவித்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகரின் நான்காவது கடிதம்
சுகேஷ் சந்திரசேகரின் நான்காவது கடிதம்

இதனை சுகேஷின் வழக்கறிஞர் ஏ.கே.சிங் உறுதி செய்துள்ளார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி குஜராத் தேர்தலுக்காக தயாராகும் நேரத்தில் இது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும்.

இதையும் படிங்க:’என்னிடம் ரூ.50 கோடி கேட்டார் கெஜ்ரிவால்..!’ - மோசடி குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.